எல்லோர்க்கும் பொருந்தும் குறள் 24 "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்ற கண்ணதாசன் எழுதிய பாடலின் பொருள் என்ன? நினைக்கத் தெரிந்த மனதிற்கு ஏன் மறக்கத் தெரிந்திருக்க வேண்டும்? காதல் கைகூடாது என்று தெரிந்த காதலி காதலனைப் பற்றிய எண்ணம் முழுவதும் மறந்து போய் விடாதா? என்று ஏங்குகிறாள். அந்த எண்ணம்தானே படாத பாடு படுத்துகிறது. எப்போதுமே எதார்த்தமும் எண்ணங்களும் ஒன்றாக இல்லாமல் போனால் துன்பம்தான். எதார்த்தத்தை மாற்றுவது கடினம். அதை விட எதார்த்தத்தோடு பொருந்தாத எண்ணங்களை மறந்து விடுவது நல்லது. நினைவாற்றல் எந்த அளவிற்கு ஒரு மனிதனுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு மறதியும் சில நேரத்தில் நல்லதுதான். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மருத்துவர்கள் கொடுக்கும் சில மாத்திரைகள் எண்ணங்களை சட்டென்று நிறுத்தி மூளையை அமைதிப்படுத்தி விடும். அது ஒரு விதமான மறதிதான், நாம் வளவளவென்று மனதிற்குள் பேசிக் கொண்டே இருக்கிறோம். அதுதான் நமது எண்ணம். அந்த எண்ணம் மௌனமானால் மனதுக்கு நிம்மதி. சரி எதை எல்லாம் மறக்க வேண்டும்? எதுவெல்லாம் மனநிம்மதியைக் குறைக்கிறதோ குலைக்கிறதோ அதை எல்லாம் மறக்க வேண்
எல்லோர்க்கும் பொருந்தும் குறள் 23 மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. ஒருமுறை அர்ஜூனன் கண்ணனிடம், "கண்ணா எங்கள் அண்ணன் தர்மருக்கு பெயரிலேயே தர்மம் இருக்கிறது. அவர் தர்மத்தில் சிறந்தவர். அவரை விட கர்ணன் எந்த அளவிற்கு தர்மத்தில் சிறந்தவன். ஏன் அவனையே எல்லோரும் புகழ்கிறார்கள்?" என்று கேட்டானாம். அதைக் கேட்ட கண்ணன், "உனது சந்தேகம் நியாயம்தான். தானத்தில் தர்மன் சிறந்தவனா? கர்ணன் சிறந்தவனா? என்று சோதித்துப் பார்த்து விடலாம்" என்று சொன்னான். அந்த சோதனைக்காக ஒரு பெரிய மழையைப் பொழிய வைத்தான் கண்ணன். சமீபத்தில் வந்த மிக்ஜாம் புயல்போல, அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் மழையில் நனைந்து விட்டன. அப்போது கண்ணனும் அர்ஜூனனும் தர்மனின் அரண்மனைக்குச் சென்றனர். "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான் தர்மன். "மழையில் எங்கள் வீட்டில் வைத்திருந்த விறகு பூராவும் நனைந்து விட்டது. அடுப்பெரிக்க முடியாது. உணவு சமைக்க முடியாது. எனவே எங்களுக்கு விறகு வேண்டும்" என்று சொன்னான் கண்ணன். "நீங்கள் தங்கம் வைரம் என விலை உயர்ந்த பொருட்களைக் கூடக் கேளுங்கள் தருகிறேன். ஆனால் இந்த மழையி